திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்!
ஆடுமின்(ன்)! அழுமின்! தொழுமின்(ன்)! அடி
பாடுமின்! பரமன் பயிலும்(ம்) இடம்,
கூடுமின், குரங்காடுதுறையையே!

பொருள்

குரலிசை
காணொளி