திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

தேடுவார், பிரமன் திருமால் அவர்;
ஆடு பாதம் அவரும் அறிகிலார்;
மாட வீதி வலஞ்சுழி ஈசனைத்
தேடுவான் உறுகின்றது, என் சிந்தையே.

பொருள்

குரலிசை
காணொளி