படையானை, பாசுபத வேடத்தானை, பண்டு
அனங்கற் பார்த்தானை, பாவம் எல்லாம்
அடையாமைக் காப்பானை, அடியார் தங்கள் அரு
மருந்தை, “ஆவா!” என்று அருள் செய்வானை,
சடையானை, சந்திரனைத் தரித்தான் தன்னை,
சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின்
நடையானை, நம்பியை, நள்ளாற்றானை, -நான்
அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.