திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மாற்றேன், எழுத்து அஞ்சும் என்தன் நாவில்; மறவேன்,
திருவருள்கள்; வஞ்சம் நெஞ்சின்
ஏற்றேன்; பிற தெய்வம் எண்ணா நாயேன், எம்பெருமான்
திருவடியே எண்ணின் அல்லால்;
மேல்-தான் நீ செய்வனகள் செய்யக் கண்டு, வேதனைக்கே
இடம் கொடுத்து, நாளும் நாளும்
ஆற்றேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

பொருள்

குரலிசை
காணொளி