வரை ஆர் மடமங்கை பங்கா! கங்கை-மணவாளா! வார்சடையாய்!
நின்தன் நாமம்
உரையா, உயிர் போகப் பெறுவேன் ஆகில், உறு நோய் வந்து
எத்தனையும் உற்றால் என்னே?
கரையா, நினைந்து, உருகி, கண்ணீர் மல்கி, காதலித்து, நின்
கழலே ஏத்தும் அன்பர்க்கு
அரையா! அடியேனை, “அஞ்சேல்!” என்னாய் ஆவடுதண்துறை
உறையும் அமரர் ஏறே!.