துறந்தார் தம் தூ நெறிக்கண் சென்றேன் அல்லேன்;
துணைமாலை சூட்ட நான் தூயேன் அல்லேன்;
பிறந்தேன் நின் திரு அருளே பேசின் அல்லால்
பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே;
செறிந்து ஆர் மதில் இலங்கைக் கோமான்தன்னைச்
செறு வரைக்கீழ் அடர்த்து, அருளிச் செய்கை எல்லாம்
அறிந்தேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.