உலந்தார் தலைகலன் ஒன்று ஏத்தி, வானோர் உலகம் பலி
திரிவாய்! உன்பால் அன்பு
கலந்தார் மனம் கவரும் காதலானே! கனல் ஆடும்
கையவனே! ஐயா! மெய்யே
மலம் தாங்கு உயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே
விழுந்து, அழுந்தி, நாளும் நாளும்
அலந்தேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.