திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கோன் நாரணன் அங்கம் தோள்மேல் கொண்டு, கொழு
மலரான் தன் சிரத்தைக் கையில் ஏந்தி,
கான் ஆர் களிற்று உரிவைப் போர்வை மூடி,
கங்காளவேடராய் எங்கும் செல்வீர்;
நான் ஆர், உமக்கு, ஓர் வினைக்கேட(ன்)னேன்?
நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே
ஆனாய்! அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.

பொருள்

குரலிசை
காணொளி