திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே
தெள்ளி மா மணி தீவிழிக்கும்(ம்) இடம் செந் தறை
கள்ளி வற்றி, புல் தீந்து, வெங் கானம் கழிக்கவே,
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே.

பொருள்

குரலிசை
காணொளி