திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

வலம் கொள்வார் அவர் தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து;
கலங்கக் காலனைக் காலால், காமனைக் கண், சிவப்பானை;
அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை; நாளும்
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.

பொருள்

குரலிசை
காணொளி