திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

தண்டு ஏர் மழுப்படையான், மழவிடையான், எழு கடல் நஞ்சு
உண்டே புரம் எரியச் சிலை வளைத்தான்,-இமையவர்க்கா,-
திண் தேர்மிசை நின்றான் அவன், உறையும் திருச் சுழியல்-
தொண்டே செய வல்லார் அவர் நல்லார்; துயர் இலரே.

பொருள்

குரலிசை
காணொளி