திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

மலம் தாங்கிய பாசப் பிறப்பு அறுப்பீர்! துறைக் கங்கைச்-
சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திருச் சுழியல்
நிலம் தாங்கிய மலரால்; கொழும் புகையால், நினைந்து ஏத்தும்!
தலம் தாங்கிய புகழ் ஆம்; மிகு தவம் ஆம்; சதுர் ஆமே!

பொருள்

குரலிசை
காணொளி