திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

காற்றானே! கார்முகில் போல்வது ஒர் கண்டத்து எம்
கூற்றானே! கோல்வளையாளை ஓர்பாகம் ஆம்
நீற்றானே! நீள்சடைமேல் நிறை உள்ளது ஓர்
ஆற்றானே! பரவையுள் மண்டளி அம்மானே!

பொருள்

குரலிசை
காணொளி