மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த
மருந்தை, என் மாறிலா மணியைப்,
பண்டலர் அயன்மாற் கரிதுமாய், அடியார்க்
கெளியதோர் பவளமால் வரையை,
விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்
திருவீழி மிழலையூர் ஆளும்
கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக்
குறுகவல் வினைகுறு காவே.