உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல்
அருள்சொரி தரும்உமா பதியை,
வளங்கிளர் நதியும் மதியமும் சூடி
மழவிடை மேல்வரு வானை,
விளங்கொளி வீழி மிழலைவேந்தே’ என்
றாந்தனைச் சேந்தன்தா தையையான்
களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்
கைக்கொண்ட கனககற் பகமே.