எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்,
எண்ணில்பல் கோடிதிண் டோள்கள்,
எண்ணில்பல் கோடி திருவுரு நாமம்
ஏர்கொள்முக் கணமுகம் இயல்பும்
எண்ணில்பல் கோடி எல்லைக்கப் பாலாய்
நின்றைஞ்ஞூற் றந்தணர் ஏத்தும்
எண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி
இவர்நம்மை ஆளுடை யாரே.