பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்; ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள் நீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே!
நிருத்தனார், நீள் சடை மதியொடு பாம்பு அணி கருத்தனார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள அருத்தனார்; அழகு அமர் மங்கை ஓர்பாகமாப் பொருத்தனார், கழல் இணை போற்றுதல் பொருளதே.
பண்ணின் ஆர் அருமறை பாடினார், நெற்றி ஓர் கண்ணினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள விண்ணின் ஆர் விரிபுனல் மேவினார், சடைமுடி அண்ணலார், எம்மை ஆள் உடைய எம் அடிகளே
பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது; பல் பலி உணங்கல் ஓடு உண்கலன்; உறைவது காட்டு இடை கணங்கள் கூடித் தொழுது ஏத்து காட்டுப்பள் நிணம் கொள் சூலப்படை நிமலர் தம் நீர்மையே!
வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரிக் கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ள திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி, அங்கு அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே
வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம் முன் ஓதினார், உமை ஒரு கூறனார், ஒண்குழைக் காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள் நாதனார்; திருவடி நாளும் நின்று ஏத்துமே!
மையின் ஆர் மிடறனார், மான் மழு ஏந்திய கையினார் கடிபொழில் சூழ்ந்த காட்டுப்பள்ள தையல் ஓர்பாகமாத் தண்மதி சூடிய ஐயனார்; அடி தொழ, அல்லல் ஒன்று இல்லையே.
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின் ஆர் மலைதனால் வல் அரக்கன் வலி வாட்டினான், கலைதனால் புறவு அணி மல்கு காட்டுப்பள் தலைதனால் வணங்கிட, தவம் அது ஆகுமே.
செங்கண் மால், திகழ்தரு மலர் உறை திசைமுகன், தம் கையால்-தொழுது எழ, தழல் உரு ஆயினான்- கங்கை ஆர் சடையினான்-கருது காட்டுப்பள் அம் கையால் தொழுமவர்க்கு, அல்லல் ஒன்று இல்லையே.
போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள் வாதினால் உரை அவை மெய் அல; வைகலும், காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள் ஏரினால்-தொழுது எழ, இன்பம் வந்து எய்துமே.
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்- அருமறை அவை வல அணி கொள் சம்பந்தன்-சொல், கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள் பரவிய தமிழ் சொல, பறையும், மெய்ப் பாவமே.