பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்; பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்; முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே.
பாகம் மாலை,- மகிழ்ந்தனர்,- பால்மதி; போக, ஆனையின் ஈர் உரி போர்த்தவர் கோகம்மாலை, குலாயது ஓர் கொன்றையும், ஆக, ஆன்நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே.
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்தன்னுளே வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு, நான், துஞ்சும் போழ்து, நின் நாமத் திரு எழுத்து- அஞ்சும் தோன்ற, அருளும் ஐயாறரே.
நினைக்கும் நெஞ்சின் உள்ளார்; நெடு மா மதில்- அனைத்தும் ஒள் அழல்வாய் எரியூட்டினார்; பனைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர் அனைத்துவாய்தலுள் ஆரும் ஐயாறரே.
பரியர்; நுண்ணியர்; பார்த்தற்கு அரியவர்; அரிய பாடலர்; ஆடலர்; அன்றியும் கரிய கண்டத்தர்; காட்சி பிறர்க்கு எலாம் அரியர்; தொண்டர்க்கு எளியர்-ஐயாறரே.
புலரும் போதும், இலாப் பட்ட பொன்சுடர், மலரும் போதுகளால் பணிய, சிலர்; இலரும், போதும் இலாததும் அன்றியும்; அலரும் போதும் அணியும் ஐயாறரே.
பங்கு அ(ம்)ம்மாலைக் குழலி, ஓர் பால்நிறக் கங்கை, மாலையர் காதன்மை செய்தவர் மங்கை, மாலை மதியமும், கண்ணியும், அங்கமாலையும், சூடும் ஐயாறரே.
முன்னை ஆறு முயன்று எழுவீர்; ழுஎலாம் பின்னை ஆறு பிரிழு எனும் பேதைகாள்! மன் ஐ ஆறு மருவிய மாதவன் தன் ஐயாறு தொழ, தவம் ஆகுமே.
ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி வானை ஆறு வளாயது காண்மினோ! நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன் அருள் தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே.
அரக்கின் மேனியன்; அம் தளிர் மேனியன்; அரக்கின் சேவடியாள் அஞ்ச, அஞ்சல்! என்று, அரக்கன் ஈர்-ஐந்துவாயும் அலறவே, அரக்கினான், அடியாலும்-ஐயாறனே.
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம் முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர் அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.
மூல வண்ணத்தராய், முதல் ஆகிய கோல வண்ணத்தர் ஆகி, கொழுஞ் சுடர் நீலவண்ணத்தர் ஆகி, நெடும் பளிங்கு ஆல வண்ணத்தர் ஆவர்-ஐயாறரே.
சிந்தை வண்ணமும், தீயது ஓர் வண்ணமும், அந்திப் போது அழகு ஆகிய வண்ணமும், பந்திக் காலனைப் பாய்ந்தது ஓர் வண்ணமும், அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.
இருளின் வண்ணமும், ஏழ் இசை வண்ணமும், சுருளின் வண்ணமும், சோதியின் வண்ணமும், மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும், அருளும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல் குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும், மழைக்கண் மா முகில் ஆகிய வண்ணமும், அழைக்கும் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
இண்டை வண்ணமும், ஏழ் இசை வண்ணமும், தொண்டர் வண்ணமும், சோதியின் வண்ணமும், கண்ட வண்ணங்கள் ஆய்க் கனல் மா மணி அண்ட வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
விரும்பும் வண்ணமும், வேதத்தின் வண்ணமும், கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும், விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும், அரும்பின் வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
ஊழி வண்ணமும், ஒண்சுடர் வண்ணமும், வேழ் ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும், வாழித் தீ உரு ஆகிய வண்ணமும், ஆழி வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
செய் தவன் திருநீறு அணி வண்ணமும், எய்த நோக்க(அ)அரிது ஆகிய வண்ணமும், கைது காட்சி அரியது ஓர் வண்ணமும், ஐது வண்ணமும், ஆவர்-ஐயாறரே.
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும், இடர்(க்)கள் போல் பெரிது ஆகிய வண்ணமும், கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும், அடுத்த வண்ணமும், ஆவர்-ஐயாறரே.