பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
வேண்டும், நின் கழல்கண் அன்பு; பொய்மை தீர்த்து, மெய்ம்மையே ஆண்டுகொண்டு, நாயினேனை, ஆவ என்று அருளு, நீ; பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி! போற்றி! என்றும், என்றும் மாண்டு மாண்டு, வந்து வந்து, மன்ன! நின் வணங்கவே.