திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கலந்து, நின் அடியாரோடு, அன்று, வாளா, களித்திருந்தேன்;
புலர்ந்து போன, காலங்கள்; புகுந்து நின்றது இடர், பின் நாள்;
உலர்ந்து போனேன்; உடையானே! உலவா இன்பச் சுடர் காண்பான்,
அலந்து போனேன்; அருள் செய்யாய், ஆர்வம் கூர, அடியேற்கே!

பொருள்

குரலிசை
காணொளி