பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பொல்லாப் படுதலை ஒன்று ஏந்திப் புறங்காட்டு ஆடலீர்! வில்லால் புரம் மூன்றும் எரித்தீர்! விடை ஆர் கொடியினீர்! எல்லாக்கணங்களும் முறையால் ஏத்த, இடைமருதில், செல்வாய கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.