பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சாம்பலோடும் தழல் ஆடினானும், சடையின் மிசைப் பாம்பினோடும் மதி சூடினானும், பசு ஏறியும் பூம் படுகல்(ல்) இள வாளை பாயும் புகலி(ந்) நகர், காம்பு அன தோளியோடும்(ம்) இருந்த கடவுள் அன்றே!