திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

கயல சேல கருங்கண்ணியர் நாள்தொறும்
பயலை கொள்ள, பலி தேர்ந்து உழல் பான்மையார்
இயலை, வானோர் நினைந்தோர்களுக்கு, எண்ண(அ)ரும்
பெயரர்; கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே.

பொருள்

குரலிசை
காணொளி