விண்ணில் ஆர் மதி சூடினான், விரும்பும் மறையவன் தன்
தலை
உண்ண நன் பலி பேணினான், உலகத்துள் ஊன் உயிரான்,
மலைப்-
பெண்ணின் ஆர் திருமேனியான்-பிரமாபுரத்து உறை கோயிலுள்
அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம் உடை
ஆதியே.