செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும் ஏத்தி
நினைந்திட,
ஐயன், ஆண்டகை, அந்தணன், அருமா மறைப்பொருள்
ஆயினான்;
பெய்யும் மா மழை ஆனவன்; பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண்மழு ஏந்தியை(ந்) நினைந்து, ஏத்துமின், வினை
வீடவே!