அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த, மா மடமாதொடும்,
பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை
கோயிலான்;
தொடையல் ஆர் நறுங்கொன்றையான் தொழிலே பரவி நின்று
ஏத்தினால்,
இடை இலார், சிவலோகம் எய்துதற்கு; ஈது காரணம்
காண்மினே!