வாய் இடை(ம்) மறை ஓதி, மங்கையர் வந்து இடப் பலி
கொண்டு, போய்ப்-
போய் இடம்(ம்) எரிகான் இடைப் புரி நாடகம்(ம்) இனிது
ஆடினான்;
பேயொடும் குடிவாழ்வினான்-பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்;
“தாய், இடைப் பொருள், தந்தை, ஆகும்” என்று ஓதுவார்க்கு
அருள்-தன்மையே!