திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

ஊடினால் இனி யாவது? என் உயர் நெஞ்சமே!-உறு
வல்வினைக்கு
ஓடி நீ உழல்கின்றது என்? “அழல் அன்று தன் கையில்
ஏந்தினான்,
பீடு நேர்ந்தது கொள்கையான்-பிரமாபுரத்து உறை வேதியன்,
ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை” என்று நின்று
ஏத்திடே!

பொருள்

குரலிசை
காணொளி