திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கௌசிகம்

மறையன், மா முனிவன், மருவார் புரம்
இறையின் மாத்திரையில்(ல்) எரியூட்டினான்,
சிறைவண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம்
இறைவன்தான், எனை ஏன்றுகொளும் கொலோ?

பொருள்

குரலிசை
காணொளி