வேதம் ஆய், வேள்வி ஆகி, விளங்கும் பொருள் வீடு அது
ஆகி,
சோதி ஆய், மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது
ஒன்றே?
சாதியால் மிக்க சீரால்-தகுவார் தொழும் சாத்தமங்கை
ஆதி ஆய் நின்ற பெம்மான்! அயவந்தி அமர்ந்தவனே!