திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

இமயம் எல்லாம் இரிய மதில் எய்து, வெண் நீறு பூசி,
உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது
ஒன்றே?
சமயம், ஆறு அங்கம், வேதம், தரித்தார் தொழும்
சாத்தமங்கை,
அமைய வேறு ஓங்கு சீரான், அயவந்தி அமர்ந்தவனே!

பொருள்

குரலிசை
காணொளி