திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

கடல் இடை வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடை ஏறி,
உடல் இடையின் பொடிப் பூச வல்லான், உமையோடு
ஒருபாகன்,
அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார்
மேல்
நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான், இடம் நாரையூர்
தானே.

பொருள்

குரலிசை
காணொளி