பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன், சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திரு நாரையூரான் மேல், பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்து, ஆக ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும், அவலக்கடல் தானே.