திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழம்பஞ்சுரம்

உடன் பயில்கின்றனன், மாதவனே, உறு பொறி காய்ந்து
இசை மா தவனே;
திடம் பட மாமறை கண்டனனே, திரிகுணம் மேவிய
கண்டனனே;
படம் கொள் அரவு அரை செய்தனனே; பகடு உரிகொண்டு
அரை செய்தனனே;
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே, தோணிபுரத்து
உறை நம் சிவனே.

பொருள்

குரலிசை
காணொளி