திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

பூங்கழல் தொழுதும் பரவியும், புண்ணியா! புனிதா! உன் பொன் கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன்; என்ன குறை உடையேன்?-
ஓங்கு தெங்கு, இலை ஆர் கமுகு, இள வாழை, மாவொடு, மாதுளம், பல-
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே!

பொருள்

குரலிசை
காணொளி