திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

“அளித்து வந்து அடி கைதொழுமவர்மேல் வினை கெடும்” என்று இ(வ்) வையகம்
களித்து வந்து உடனே கலந்து ஆடக் காதல் ஆய்க்
குளித்தும், மூழ்கியும், தூவியும், குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புகத்
தெளிக்கும் தீர்த்தம் அறாத் திரு ஆரூர் அம்மானே!

பொருள்

குரலிசை
காணொளி