திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

பிறத்தலும், பிறந்தால் பிணிப் பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று
இறக்கும் ஆறு உளதே; இழித்தேன், பிறப்பினை நான்;
அறத்தையே புரிந்த மனத்தனாய், ஆர்வச்செற்றக்குரோதம் நீக்கி, உன்
திறத்தனாயொழிந்தேன் -திரு ஆரூர் அம்மானே!

பொருள்

குரலிசை
காணொளி