பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பல் உரைச் சமணரோடே பலபல காலம் எல்லாம் சொல்லிய சொலவு செய்தேன்; சோர்வன், நான் நினைந்தபோது; மல்லிகை மலரும் சோலைத் திரு ஐயாறு அமர்ந்த தேனை! எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியஆறே!