திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார் தம்மை எல்லாம்
போக்கினால் புடைத்து, அவர்கள் உயிர் தனை உண்டு, மால் தான்
தேக்கு நீர் செய்த கோயில்-திரு இராமேச்சுரத்தை
நோக்கினால் வணங்குவார்க்கு நோய்வினை நுணுகும் அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி