பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பொக்கம் ஆய் நின்ற பொல்லாப் புழு மிடை முடை கொள் ஆக்கை தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்று அறுவரும் துயக்கம் எய்த, மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன் செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!