திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார் தம்
மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும், குறிக்கோள் இலாது கெட்டேன்-
சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே!

பொருள்

குரலிசை
காணொளி