திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

விரை தரு கருமென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண் கண்ணாள
வெருவர, இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று,
பருவரை அனைய தோளும் முடிகளும் பாரி வீழத்
திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சுரத்து உளானே!

பொருள்

குரலிசை
காணொளி