பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர் வீச, வீற்றிருந்த அன்னங்காள்! விண்ணோடு மண் மறைகள் தோற்றுவித்த திருத் தோணிபுரத்து ஈசன், துளங்காத கூற்று உதைத்த, திருவடியே கூடுமா கூறீரே!