பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ், முயங்கு சிறை, அன்றில்காள்! பிரிவு உறும் நோய் அறியாதீர்; மிக வல்லீர்; தென்றலார் புகுந்து உலவும் திருத் தோணிபுரத்து உறையும் கொன்றை வார்சடையார்க்கு என் கூர் பயலை கூறீரே!