திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

நெளிவு உண்டாக் கருதாதே, நிமலன் தன்னை
நினைமின்கள், நித்தலும்! நேரிழையாள் ஆய
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள் தன்னை
ஒருபாகத்து அமர்ந்து, அடியார் உள்கி ஏத்த,
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல்
வேலிக் கழிப்பாலை மேய கபால (அ)ப்பனார்;
வளி உண்டு ஆர் மாயக் குரம்பை நீங்க வழி
வைத்தார்க்கு, அவ்வழியே போதும், நாமே.

பொருள்

குரலிசை
காணொளி