திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

செற்றது ஓர் மனம் ஒழிந்து, சிந்தைசெய்து,
“சிவமூர்த்தி” என்று எழுவார் சிந்தையுள்ளால்
உற்றது ஓர் நோய் களைந்து இவ் உலகம்
எல்லாம் காட்டுவான்; உத்தமன் தான்; ஓதாது எல்லாம்
கற்றது ஓர் நூலினன்; களிறு செற்றான்கழிப்பாலை
மேய கபால(அ)ப்பனார்;
மற்று இது ஓர் மாயக் குரம்பை நீங்க வழி
வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.

பொருள்

குரலிசை
காணொளி