முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ
உலகும் தாம் ஆகி நின்றார் போலும்;
கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்;
கல்லலகு பாணி பயின்றார் போலும்;
கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர்
குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்;
அடித்தாமரை மலர் மேல் வைத்தார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.