மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர் போலும்; மணி
நீலகண்டம் உடையார் போலும்;
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும்; நீறு
ஏறு தோள் எட்டு உடையார் போலும்;
வை ஆர் மழுவாள் படையார் போலும்;
வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்;
ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.