கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்;
காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்;
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்;
ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்;
எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு
ஏறிச் செல்லும் இறைவர் போலும்;
அண்ணாவும், ஆரூரும், மேயார்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.