திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து,
அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர்
ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்;
கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ
அன்ன கனலார் போலும்;
வரை ஆர் மதில் எய்த வண்ணர்
போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.

பொருள்

குரலிசை
காணொளி